To search this blog

Saturday, June 15, 2019

Swami Nammalwar Sarrumurai 2019 – ‘Vaikasi Visakham’


Today 15.6.2019 [Vaikasi 32] is a great day – ‘Vaikasi Visakham’ ~ celebrating the birth of Swami Nammalwar.

" ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தை யேகமூர்த்திக்கே" ~ என   ஸர்வேச்வரானாயும், ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும் அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்  திருவுள்ளம் பற்றுவதே!  என நமக்கு உபதேசித்த அற்புத ஆசார்யர் ஆழ்வார் ஸ்வாமி  நம்மாழ்வார்  அவதரித்த நன்னாள் இந்நாள் .   திருக்கச்சியிலே ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதிக்கு தேவப்பெருமாள் எழுந்து அருள்வது விசேஷம்.  நம் திருவல்லிக்கேணியில் ஆழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளுடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும்.  இவ்வருட உத்சவம் ஸ்ரீ அழகிய சிங்கர் ப்ரஹ்மோத்சவத்தில் வருகிறது.  நேற்று இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம்.  ஒரு அசந்தர்ப்பத்தாலே திருவீதி புறப்பட்டு இயலவில்லை.  ஸ்ரீ தெள்ளியசிங்கர் நம்மாழ்வார் சன்னதியிலேயே இரவு முழுதும் தங்கி இருந்து திருவாய்மொழி சாற்றியவருடன் உசாவி இருந்தார்.  இன்று அவருடனேயே திருமஞ்சனம்  கண்டருளி அருளிச்செயல் இசைக்கப்பெற்று, சாயங்காலம் 4 மணி அளவில் கருடசேவை புறப்பாட்டிலே உடன் செல்லும் பிரபாவம்.  திருவல்லிக்கேணியில் அப்படி ஒரு திவ்யசேவை.


[the beautiful thirumeni of Azhwar without kavacham on thiruvadi thozhal –                               Irapathu sarrumurai purappadu]

திருவரமங்கை, நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி என்றெல்லாம் அழைக்கப்படும் எனும் வானமாமலை திவ்யதேசம்.  இத்தலத்தில் ஸ்ரீசடகோபனிலே (ஸ்ரீசடாரியில்) நம்மாழ்வாரின் அழகு திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.




poets tend to exaggerate ! ~ they exhibit their mastery over words .. they waste it in praising vile useless trash thinking and stating it to be great fortune.  Swami Nammalwar shows them the way – guiding them to come and praise only the most benevolent Lord Sriman Narayana, the blemishless, most perfect Lord of the Universe ~ it is only HIM who can provide one’s needs without diminishing. 

Of the Nava Thirupathi divyadesams, ThirukKurugoor is hailed as “AzhwarThirunagari”-  as this is the Avatharasthalam of  Swami Nammalwar.   Madura Kavigal saw the leading light from Thiru Ayodhya, travelled all the way to Kurugoor, identified  Nammazhwar in the Puliyamaram [tamarind tree].  Mathurakavigal was so attached to Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar. 

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்காபுளிய மரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.  இன்று (June 15, 2019) ~ வைகாசி விசாகம் .. .. இன்று நம்மாழ்வார் அவதார திருநாள்.  நம் பதிவு இன்று திருக்குருகூரில் உள்ள பழுக்காத புளிய மரத்தையும் ~ நம் சீரியரான ஆழ்வாரை பற்றியுமே.


 


உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ*
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ*
ஒருபார் தனில் ஒக்குமூர்**

Great words of our Acharyar Sri Manavala Maamunigal when hailing the birth of Swami Nammazhwar.   Acharyan Manavalamaamunigal in his ‘Upadesa Rathinamalai’ says :   there is no other day matching Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par to Thirukurugai – the birthplace of Swami Nammalwar.

The Greatest among Alwars preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,” – that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master.    Swami Nammazhwaar was born on the auspicious poornima day of Tamil Vaikasi month in Visakha nakshathiram at Thirukurugur, now famously known as ‘Azhwar Thirunagari’.  He was born to Kari and Udayanangai. Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87)

வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும்  (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம்.  சடம் என்றால் காற்று.  வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம்.  இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார். 
ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான அழகான திவ்யதேசம்.   நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன் நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார். திருவாய்மொழி தனியனில்:- “திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,”  -  என பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.   இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமானதால் “ஆழ்வார்திருநகரி”  என்றழைக்கப்படுகிறது.

Swami Nammalwar at  Avathara sthalam


திருக்கோளூர் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளிய .  மதுரகவியாழ்வார் ஒரு சமயம்  அயோத்தியில் இருந்து  தென் திசை நோக்கி  வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு  வந்ததும் மறைந்து விட்டது.    அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த  மதுரகவியாழ்வார்,  ஞான முத்திரையுடன்  மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்துஅவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.  

o   "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என  சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்? 

o   அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத்  தின்று அங்கே கிடக்கும்"என்றார்.  

o   மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டதுஉயிர்  தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.

இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை ** நம்மாழ்வார்  **  என்று மனமுருகி மதுரகவி ஆழ்வார்   அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார். ** தேவு மற்று அறியேன்குருகூர் நம்பி; பாவின் இன்னிசை பாடித்திரிவனே.**

Swami Nammalwar in Thiruvaimozhi hails the presiding deity  at Azhwar Thirunagari  - as :

பரந்ததெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கி*
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூரதனுள்,*
பரன் திறமன்றிப்பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே ! .


Azhwar says :  It is HE who created all the Gods and all the Universe and at the time of pralayam [deluge], He in a trice – swallowed all; hid, issued, traversed and shifted all ~ mortals of this World, should they not understand easily and why nurse any apprehension after knowing this – it is Only HE at this holy ThiruKurgur – who deserves to be worshipped – none, the other !!!

திருவாய்மொழி திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது.  ஸ்ரீமன் நாராயணனின்பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய  வேண்டியதையும்    மிக சிறப்பாக அழுத்தமாக  ஆழ்வார்  நிலை  நாட்டியுள்ளார்.    இதோ இங்கே ஒரு துளி :  
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீ ர்காள்,*
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்*
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.

குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய  அற்பரைக் குறித்து, வள்ளல்  என்றும்  உயர்ந்தவன் என்றும் போற்றுவதால்  நீங்கள் பெறும்பலன் சிறிதுமில்லை. உங்கள்  வாய்மையை  இழப்பதை தவிர;  நீங்கள்  பாடுகிற துதிமொழிகளுக்கு மிகப்பொருத்தமானவன் -  பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும்  எவ்வித குறைகளும் இல்லாதவன்  ஆன மிக சிறப்பான நீலமணிவண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே;  நம் நா அவனை மட்டுமே  எவ்வெப்பொதும் துதிபாட வேண்டும் !

ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே !!
ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே !!
ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே !!
இலகு திருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே !!
வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே !!
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!
சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே !!
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே.  !!
Blessed are We to be born as Srivaishnavas, singing the glory of Alwars, Acaryas and Emperuman.  Glory to the feet of Swami Nammalwar and Sri Adhipiran.


அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். Srinivasan Sampathkumar
15th June 2019.
PS :  Sri Azhagiya singar Garuda Sevai purappadu – gopura vasal sevai @ around 0400 pm – Swami Nammalwar purappadu with Azhagiyasingar.

1 comment:

  1. Swaminnu, Adiyen Srinivasa Dasan K.Ramani, New Perungalathur. Dhanyosmi for detailed information.

    ReplyDelete