To search this blog

Saturday, March 24, 2018

Sri Rama Piran thiruther 2018


Sri Rama Piran thiruther 2018

இன்று 24.3.2018 - ஸ்ரீ ராம நவமி உத்சவத்தில் எட்டாம் நாள் ~ சிறிய திருத்தேர்* 





சக்ரவர்த்தி  திருமகனாம் இராமபிரான் ~ மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய்தலையற்றற்று வீழத் தொடுத்த தலைவன் அன்றோ  ! 

உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவார்.  

இதிஹாச புராணமான ஸ்ரீ இராமாயணத்தில், இந்திரன் கட்டளைப்படி தேர் வந்தது.   இந்திரன்   "பொரு இல் தேர் கொணர்தி" - ஒப்பற்ற தேரினைக் கொண்டு வருக; என (மாதவியாகிய தன் சாரதியிடம்) கூறினான். அக்கட்டளையை கேட்புற்றதும்,  தேவர்கள் - 'இது செயற்கு உரியது' என்றார்கள்.  இந்திரனின் சாரதியான மாதலி, தேரை செலுத்தினான்.  இந்திரனின் ரத சாரதி மாதலி,  வெறும் தேரோட்டியாய் மட்டும் இல்லாமல், சமயங்களில் தகுந்த ஆலோசனைகள் கூறும் மதியூகியாகவும் செயல்பட்டான்.  இதோ கம்ப இராமாயணத்தில் காவிய நாயகன் ராமனின் திருத்தேர் பற்றி :

மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் * பூதலம் எழுந்து படல் தன்மைய பொலந் தேர்;
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்* பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில்.


பெருங்கடல்கள்   சூழ்ந்துள்ள, இப்பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற தன்மை கொண்ட, வண்ணமயமாய் ஒளிரும்  பொன்மயமான தேரை, இந்திரனின் ஆணைப்படி அவனது தேரோட்டி மாதலி கொணர்ந்தனன்.   குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும்  மற்றும் (மேல்  மண்டலத்தில்)    உள்ளனவும்  தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும் படியாய் தேவர்கள்   அனுப்பிய   தேர்   தன்   உயரத்தால் ஆகாயத்தின் மேல் பரவியது.   அத்தகைய சீர்மை பெற்ற தேரின் மேல் இராமபிரான் ஏகினான். 





குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்,
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,
கலக்கு அற வகுத்ததுகதத்து அரவம் எட்டின்*
வலக் கயிறு கட்டியதுமுட்டியது வானை.

ஏழுகுல மலைகளின் வலிமையைத்  தன்னிடம்   கொண்டதாய்;  உயர்ந்த  கொடிஞ்சு என்னும்  உறுப்பையும்அலைகளால்  இடையறாமல் அலைக்கப்படுகின்ற நிலவுலகத்தின்    வலிமை   கொண்ட   சக்கரத்தில்   பொருந்திய   அச்சினையும்இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப்பட்ட  அந்த தேர்;  வானத்தையே   முட்டிக்கொண்டு நின்றது என்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.


Tomorrow is Sree Rama Navami ~ today is 8th day of Uthsvam – it was Thiruther – the chariot of Sri Rama and it was ‘Ramanuja Noorranthathi’ in the goshti.  Sri Ramar with Sitapiratti and Lakshmanan had kulakkarai purappadu and thence had periya maada veethi purappadu in Thiruther – the chariot. 

In the Ithihasa purana, Sree Ramayana, Indira orders his charioteer Mathali, to bring the best of the chariots and place it before the Lord who had vowed to protect Devas from Asuras.  At Thiruvallikkeni, it is no warfront – it is peaceful thulasi aaranyam.  Today, Sree Rama on rath was so pleasing to the eyes of devotees.  Here are some photos taken this day.

adiyen Srinivasa dhasan (Mamandur Srinivasan Sampathkumar)
















No comments:

Post a Comment