To search this blog

Sunday, August 8, 2010

ஆண்டாள் திருவாடிப்பூரம் உத்சவம்

பூமி பிராட்டியின் திரு அவதாரமான கோதை என பெயர் பெற்ற ஆண்டாள் கலி பிறந்து தொண்ணூற்று எட்டாவது நள வருடத்தில் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதி கூடிய பூர நக்ஷத்ரத்தில் பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் அருகே  ஒரு அழகிய பெண்  குழந்தையாக அவதரித்தார். 


தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறு பெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் நடைபெறுகிறது.


வியாழன் 12/08/2010  அன்று திருவாடிபூர சாற்றுமுறை.  திருவல்லிக்கேணியில் ஆறாம் உத்சவ புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : 




- ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

1 comment:

  1. http://picasaweb.google.com/106019994743766932900/MamundurSamprokshanam?authkey=Gv1sRgCJibjpuQtp7s5AE&feat=email#

    ReplyDelete