To search this blog

Monday, May 28, 2018

Swami Nammalwar Sarrumurai (Vaikasi Visakham) 2018 : ஆழ்வார் திருநகரி ~ "உறங்காப் புளி"


நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்கா'ப்  புளிய மரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.  இன்று (மே 28, 2018) ~ வைகாசி விசாகம் .. .. இன்று நம்மாழ்வார் அவதார திருநாள்.  நம் பதிவு இன்று திருக்குருகூரில் உள்ள பழுக்காத புளிய மரத்தையும் ~ நம் சீரியரான ஆழ்வாரை பற்றியுமே.




உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ*
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ*
ஒருபார் தனில் ஒக்குமூர்**
Acharyan Manavalamaamunigal in his ‘Upadesa Rathinamalai’ says :   there is no other day matching Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par to Thirukurugai – the birthplace of Swami Nammalwar.


Swami Nammalwar at Periamet
 Today 28th May 2018 is a significant day for all of us ~ today is ‘Vaikasi Visakham’ marking the birth of Swami Nammalvar.  Of the Nava Thirupathi divyadesams, ThirukKurugoor is hailed as “Azhwar Thirunagari”-  as this is the Avatharasthalam of  Swami Nammalwar.   MaduraKavigal saw the leading light from Thiru Ayodhya, travelled all the way to Kurugoor, identified  Nammazhwar in the Puliyamaram [tamarind tree].  Mathurakavigal was so attached to Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar.
Swami Nammalwar at Thiruvallikkeni during Adhyayana uthsavam


As we travel from Thirunelveli towards Tiruchendur – approx. 25 km away – on the banks of Tamirabarani, is this beautiful divyadesam.  The temple is ‘Aathinadhar Azhwar Thirukovil’. It was one of the largest towns of Pandya dynasty.  The presiding deity is Aathippiran and Utsavar is PolinthuNinraPiran.  Thayar is Aathinaayaki and ThirukurugurNayaki. 

Swami Nammalwar in Thiruvaimozhi hails the presiding deity as :

பரந்ததெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கி*
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூரதனுள்,*
பரன் திறமன்றிப்பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே ! .

Azhwar says :  It is HE who created all the Gods and all the Universe and at the time of pralayam [deluge], He in a trice – swallowed all; hid, issued, traversed and shifted all ~ mortals of this World, should they not understand easily and why nurse any apprehension after knowing this – it is Only HE at this holy ThiruKurgur – who deserves to be worshipped – none, the other !!!

ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான அழகான திவ்யதேசம்.   நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன் நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார். திருவாய்மொழி தனியனில்:- “திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,”  -  என பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.   இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமானதால்“ஆழ்வார்திருநகரி” என்றழைக்கப்படுகிறது.

ஸ்ரீமதுரகவிஆழ்வார் அயோத்தியில் இருந்து தென்திசை நோக்கி பேரொளியைக் கண்டு ஸ்ரீஆதிநாதர்ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்கா' புளியமரத்தில் சடகோபரைக் கண்டதையும், சுவாமி நம்மாழ்வாரின் பெருமையையும் நாம் இங்கே கொண்டாடுவோம்.. **

வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும்  (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம்.  சடம் என்றால் காற்று.  வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம்.  சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள இந்த "உறங்காபுளிய மரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம். 
 
திருக்கோளூர் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளிய .  மதுரகவியாழ்வார் ஒரு சமயம்  அயோத்தியில் இருந்து  தென் திசை நோக்கி  வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு  வந்ததும் மறைந்து விட்டது.   அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த  மதுரகவியாழ்வார்,  ஞான முத்திரையுடன்  மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்துஅவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.  




 "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என  சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்? 

அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத்  தின்று அங்கே கிடக்கும்"என்றார்.  
மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டதுஉயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்துஅனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.

இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்று மனமுருகி மதுரகவி ஆழ்வார்   அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார். ** தேவு மற்று அறியேன்குருகூர் நம்பி; பாவின் இன்னிசை பாடித்திரிவனே.**



The Greatest among Alwars, Swami Nammalvar  preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,” – that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master.   Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87).  

Blessed are We to be born as Srivaishnavas, singing the glory of Alwars, Acaryas and Emperuman.  Glory to the feet of Swami Nammalwar and Sri Adhipiran.





அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.

1 comment:

  1. ஆழ்வார் திருவடிகளே சரணம்...

    ReplyDelete