To search this blog

Wednesday, March 16, 2011

Thiruvallikkeni Parthar Thavana Uthsavam 2011 - Thirukachi Nambigal Satrumurai :: ஸ்ரீ பார்த்தர் தவன உத்சவமும் : திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறையும்



ஸ்ரீ பார்த்தர் தவன உத்சவமும் : திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறையும்

Thiruvallikkeni is replete with Festivities.  Of the many Uthsavams, Thavana Uthsavam is significant.  Immediately after the Float festival, Sri Parthasarathi visits Thavana Uthsava Bungalow situate in TP Koil Street.  In the centre it has a raised structure.  In olden days, it had two minars inside which there used to be bats.  Now this place is being maintained well.  During this Uthsavam, Perumal takes rest under the roof made of thavanam – an aromatic herb.  [Artemisia pallens, Dhavanam (Tamil: தவனம்), is an aromatic herb, In genus of small herbs or shrubs, xerophytic In nature. The flowers are racemose panicles bear numerous small yellow flower heads or capitula, but the silvery white silky covering of down gives the foliage a Grey or white appearance]


This is a festival of 5 days – the second day (Sunday) 13/3/11 was the birth celebration of Thirukachi Nambigal.  He was born in Poovirunthavalli, which is now known as ‘poonamallee’ lying around 20 km away from Central Chennai enroute to Bangalore, Kanchi, Vellore, Thiruvallur and Tirupathi. 

Nambigal served Kanchi Peruralalar by doing ‘aalavatta kainkaryam – (doing service of providing air by hand fan) and was an acharyan of Swami Ramanujar.  It is believed that Arulalar spoke to Nambigal in person.  Here is something on Thavana Uthsavam, Thirukachi nambigal and some photos taken during the purappadu. 

                                                       ***************************************

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில் தவன உத்சவம் முக்கியமான ஒன்று.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் தவன உத்சவ பங்களா அமைந்து உள்ளது.ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மாசி  மாதம் தெப்போத்சவம் முடிந்தவுடன்  ஐந்து நாட்களும், வரதருக்கு மாசி ஹஸ்ததன்றும் அழகிய சிங்கருக்கு மாசி சுவாதி விசாகம் அனுஷம் மூன்று நாட்களும் தவன உத்சவம் சிறப்பாக  நடக்கிறது. தினம் காலை பெருமாள் பங்களாவுக்கு எழுந்தருளி திருமஞ்சனமான பிறகு சாயங்காலம் பெரிய மாட வீதி புறப்பாடு  கண்டு அருள்வார். 

திருவல்லிக்கேணியில் மூன்று பங்களாக்கள் உண்டு. தவன உத்சவ பங்களா, கோமுட்டி பங்களா மற்றும் வசந்த உத்சவ பங்களா என்பவை இவை.தவன உத்சவ பங்களா நடுவில் மண்டபமும், பெரிய திண்ணையும் நிறைய மணல் பரப்புமாக இருந்தது. இங்கு ஒரு பெரிய கிணறு உண்டு. கோரி என்றுஅழைக்கபட்ட இரண்டு மாடங்கள் இருந்ததன. வட்ட படிக்கட்டுகள் ஏறி செல்ல இயலும். மேலே நிறைய வவ்வால்களுடன் பயம் தரும் இடமாக இருக்கும். கால போக்கில் இந்த கோரிகள் சரிந்து சிதிலமாகின. சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு இப்போது மண்டபம் நன்றாக உள்ளது. தவன உத்சவம் தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் ஈக்காடு தாங்கல் திருஊறல் உத்சவம், ராம நவமி உத்சவம் காலங்களில் பெருமாள் இங்கே எழுந்து அருளுகிறார்.

முன்பு பெருமாள் எழுந்து அருளும் காலங்களில் நீர் இறைத்து சுத்தம் பண்ணி கோலங்கள் போட்டு பரிமளிக்கும். தவனம் என்பது வாசனை அளிக்கும் நறுமண பயிர். ஒரு காலத்தில் இந்த இடத்தில தவனம் மண்டி இருந்து இருக்கலாம். தற்போது தவனத்தால் மேற் கூறாளம் அமைக்கப்பட்டு பெருமாளுக்கு நறுமணம் கமழுமாறு உள்ளது. 

இந்த ஞாயிறு அன்று 13-03-2011  மாசி மிருகசீரிஷம் நக்ஷத்திரம் - திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை.  காலை பெருமாளுடன் நம்பிகள் தவன உத்சவ பங்களாவிற்கு எழுந்து அருளினார்.  இரண்டாம் திருவந்தாதி கோஷ்டி ஆனது.   மாலை சிறப்பாக சாற்றுமுறை புறப்பாடு -  இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி ஆனது. புறப்பாட்டின் பொது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  
ஒற்றை மாலையுடன் எழுந்து அருளும் அவசரம் 
பின்னழகு 
தவன கூராளத்தில் 
தவன உத்சவ பங்களாவுக்குள் 
பங்களா மேடை
திருக்கச்சி நம்பிகள் 
எங்கள் அழகர் - ஸ்ரீ பார்த்தர்
திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார்.  இவர் 1009 ஆம் ஆண்டு அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.  சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்ல இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும்.  இன்று : பூனமல்லி / பூந்த மல்லி  என மருவி அழைக்கபடுகிறது.  இங்கே திருக்கச்சி நம்பிகளுக்கு  பிரதானமாக கோயில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள்- திருக்கச்சிநம்பிகள் கோயில்தான் அது. இங்கே காஞ்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார்.   பூவிருந்தவல்லி என்பது தான் கால போக்கில் இப்படி மருவி விட்டதாம்.  திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

திருக்கச்சி நம்பிகள் தினமும் பூக்கள் சமர்ப்பித்து திருகச்சியிலே தேவராஜ பெருமாளுக்கு திரு ஆலவட்டம் (விசிறி) திருப்பணி செய்து வந்தாராம்.  இவருடன் பெருமாள் தினமும் பேசுவாராம்.  இளையாழ்வார்  (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம்.  அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன.  "அஹமேவ பரம் தத்வம்" - என்பது முதல் வார்த்தை.  'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும்.  நாம் இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நன்மை என்பதை உணர வேண்டும். 

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் 
==================================================================

When searching for some details, stumbled upon the website of Desikan.  Have read his posts earlier, as am also a very ardent fan of Sujatha.  Here is something taken from Desikan's web (with his due permission and thanks to him)-  Nandri :  http://desikan.com/blog/?p=145
முதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி 1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது.கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.
“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.
நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.
“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.
“நம்பி வீடு”
“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.
“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப. அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.
“உரமா ?”
“ஆமங்க வியசாயத்துக்கு”
அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.
“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”
“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”
திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான் 

No comments:

Post a Comment