To search this blog

Sunday, November 1, 2020

Acaryar Swami Pillai Ulagariyar .. .. 'ஸ்ரீவசன பூஷண செல்வன் - சுவாமி பிள்ளை உலகாரியர்"

The Battle of Ain Jalut was fought in  1260 in southeastern Galilee, between the Egyptian Mamluk army and the Mongols. The Mongols were crushingly defeated by Qutuz's forces,  but Saif ad-din Qutuz, the Mamluk sultan was soon assassinated. Sold into slavery in Egypt, he rose to vice-Sultan over 20 years, becoming the power behind the throne. He was prominent in defeating the Seventh Crusade, which invaded Egypt in 1249–50. Mamluk were slave soldiers, freed slaves, Muslim converts assigned to military and administrative duties, and Muslim rulers of slave origin.

Here is a sannathi of our Acaryar on whom the post is dedicated at Sri Varadharaja Manavala Mamunigal Thirukovil at  Varadha Muthiappan Street in Kothawal chavadi area of George Town.  .. at Thiruvarangam it is much more prominent – near Swami Ramanujar sannathi – nearer Vellai gopuram and 1000 pillored  mandapam.  The modern day youngsters can understand and recollect so many intricate subjects, they are so good in statistics on the Country, Cinema, Sports (not restricted to Cricket alone), Science, Medicine and Technology – ask at random, 5 youngsters in your home and if they are not aware of Acaryar  Sri Pillai Logachar – we must admit our failure in involving them and providing them some basics of our Sampradhayam !  and our sampradhayam thrives on the glorious sacrifice of this mahan Acaryar.  





Here is his thaniyan :

லோகச்சர்யாய குரவே  கிருஷ்ண பாதஸ்ய சூனவே

சம்சார போகி சந்தஷ்ட   ஜீவ  ஜீவாதவே  நம 

Acharyar ‘Pillai Ulagariyar’ – whose story I have tried to capsulate couple of times earlier.   For us Acharyars are most important – the Guru parampara emanated from the Holy feet of Sri Periya Perumal, Periya Pirattiar, Senai Muthalvar, Nammazhwar, Naathamunigal, Uyyakkondar, Manakkal Nambigal, Aalavanthar, Periya Nambi, Emperumaanar, Koorathazhwan, Mudaliandan, Embaar, Battar, Nanjeeyar, Nampillai,  Vadakku Thiruveethipillai, Pillai Logachariyar, Thiruvoimozhipillai, Swami Maanavala Maamunigal.  

Most of our preceptors lived peacefully extolling Emperuman, they have handed over to us treasure trove of bakthi literature – there was this tragic period when our Namperumal [Thiruvarangar] was in exile ~ close to 6 decades - (1323 to 1371 AD) – and great deal of credit goes to Acharyar Ulagariyar in protecting the Uthsava idol and ensuring that posterity could worship NumPerumal happily.   

Sometimes, great revolutions happen in History of Empires by accident – perhaps the first invasion of Deccan too could fall under this.  During one of the Mamluk ! revolutions in far off Delhi, a Khilji high officials, one of the slaves of Ghiyasuddin Balban raised himself to the throne.  At that time itself he was an old man known for bravery coupled with barbarism.   Down under in the South, Pandya were ruling part of Tamil Nadu with Madurai as their capital.  When the invasion occurred, the King was Maravarman Kulasekhara 1 who had two sons, a natural son Vira Pandiyan and other Sundara Pandiyan.   The son assassinated his father and took possession of the throne and the othr brother was driven distant.  He sought the assistance of Sultan of Delhi, whose naik was Malika Kafur. The appeal only provided the spark and much needed reason for interference.

History has enough records but we never read them – when the marauding invaders pillaged all that was found on their way and entered the holy Thiruvarangam by the north gage – Arya Bhattas who were guarding fought valiantly.   Their courageous chief Panjukondan was overpowered and property was looted.  A century or so later, Prince Kampana overpowered Muhammadan garrisons in South India and brought the whole of it under control of Vijayanagar.  Gopanna his Chief advisor got the idol of Namperumal reinstalled back in the holy temple of Thiruvarangam in Saka year 1293, 1370 AD in the year Paritapi month Vaikasi date 17.

மதுரையில் உள்ளது ஆனைமலை.   இம்மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது.  இவ்விடம்  நரசிங்கமங்கலம் என்றும் ஜ்யோதிஷ்குடி எனவும் அழைக்கப்படுகிறது.   இங்கேதான் நமது ஆச்சர்யச்ரேஷ்டரான 'லோகாச்சார்யரின் திருவரசு உள்ளது.  நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு எழுந்தருள வேண்டிய துயரக்காலத்தில், தள்ளாத வயதில் ஒரு சிறு படையை உருவாக்கி பயணித்த நம் ஆசார்யன் இங்குள்ள காடுகளுக்கு வந்தபோது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.  நம்பெருமானை சுமந்து வந்த ஸ்ரீபாதம்தாங்கிகள் பலநாட்களாக உண்ணாததால் பலம் குறைந்து இங்கே இளைப்பாறி - நோய்வாய்ப்பட்ட பிள்ளை உலகாரியரையும் மற்றும் சிலரையும் தவிர - குழு மேலே பயணிக்கிறது.  நோய்வாய்ப்பட்ட ஆசார்யர் அரங்கனை காக்கும் புனித பணியில் இங்கேயே திருநாடு எழுந்தருளுகிறார்.   

நம்பெருமாளை காப்பாற்ற பிள்ளை உலகாரியர்  தன் இன்னுயிர் ஈந்த அதே வேளையில் சுவாமி வேதாந்தாசார்யர், நமது மறை நூல்களை காப்பாற்றி மேல்கோட் நோக்கி பயணித்தார்.  இந்த காலகட்டத்திலே அவர் சாதித்தி அபிதீ ஸ்தவம் என்ற நூலில் இருந்து ஒரு ஸ்லோகம். 

அபிதி இஹ யத் ஜுஷாம் யத் அவதீரிதா நாம் பயம்
பயம் அபய விதாயின ஜகத் யத் நிதேச ஸ்த்திதா
தத் ஏதத் அதி லங்கித த்ருஹிண சம்பு சக்ர ஆதிகம்
ரமா சகம் அதீமஹே கிம் அபி ரங்க தூர்யம் மஹ: 
 

இந்த உலகில் உள்ளவர்கள் எதை பற்றினால் பயம் நீங்குமோ - அது ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்ந்திருக்கும் ஸ்ரீரங்கநாதனின்  திருவடிகளே என அருள்கிறார்.  

Thiruvarangam is the greatest of Divyadesams and Sriranga Vimanam owes its origin to Brahma, the creator, the first to get it and worshipped it for long in Satyaloka.  The Vimana was later obtained By Ikshvaku and later descended to mother earth, enabling all of us to have darshan at the Holy Sri Rangam divyadesam.  It is Emperuman, Sri Ranganathan, (Periya Perumal) who protects us – in His divine drama, there was a period of melancholy when thousands died in trying to protect Him from the marauding army of Malik Kafur  and his agent Ulugh Khan. 


24.10.2020  ஒரு சீரிய நாள் ! -  ஐப்பசியில் திருவோணம் – திருவல்லிக்கேணியில் ஒரு அதி அற்புத புறப்பாடு நடைபெறும். இவ்வருடம் கொரோனா காரணமாக புறப்பாடு இல்லை !   அழகு மிளிரும் ஸ்ரீ பார்த்தசாரதி முன்பே திவ்யப்ரபந்த கோஷ்டி ~ அதனினும் முன்பு இரண்டு ஆச்சார்யர்கள் (சுவாமி மணவாள மாமுனிகள் (விடையாற்றி); ஸ்ரீ பிள்ளை உலகாரியர்) மற்றும்  திரு பொய்கை ஆழ்வார் திருவவதார தினம்.   ஸ்ரீவைணவ திவ்யதேசத்தில் வாழ்வதில் முக்கிய பலன் ஒன்று ~ எம்பெருமானை திருவீதி புறப்பாடுகளிலே சேவிக்கும் ஆனந்தம்.  ஆனால் சுமார் 700 ஆண்டுகள் முன்பு நடந்த திருக்காவேரியை தாண்டிச்சென்ற அப்புறப்பாட்டை  நினைக்க கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்; துக்கம் தொண்டையை அடைக்கும்.  

Depending on our selection, history teaches us various things.  Woraiyur, nearer Trichy was once the capital of Cholas – fact supported by archaeological and literary evidences.  The place was under the control of Cholas even during Kalabhra interregnum. In 1751-52 occurred the ‘siege of Trichnopoly’ by Chanda Sahib. There were some more battles too .. ..the islamic invasion was firmly entrenched in Northern India since the days of Mohammad of Ghori – and in the 13th century they travelled to southern peninsula too.  In history, some great revolutions occurred accidentally and perhaps the first invasion of Deccan too !  in Delhi, one of the slaves of Ghiyasuddin Balban raised himself to the throne and his generals ran South.   Ulugh Khan’s conquest set up a permanent sultanate at Madurai that held one of the cruelest regimes in Indian History and lasted for around forty years. There are Travel records made by a traveler named Ibn Batuta, who visited India and who also married one of the daughters of the Sultan himself but was horrified at the wanton cruelty and bloodshed. Even among themselves the various Sultans who rapidly succeeded each other for the throne were lusty for fellow blood as well – it was a regime of treachery.  Malik Kafur’s invasions of Malabar and South had the singular objective – ‘plunder’.   According to Amir Khusru ' the Malik represented that on the coast of Malabar were 500 elephants, larger than those which had been presented to the Sultan from warangal, and that  he combined the extirpation of the idolaters.  

Moving away from the pillages, to us what is of significance is the glorious Temple at Srirangam and Sri Ranganathar.  The temple has great religious significance and has seen various  dynasties and some plundering too ! ~ it was the saddest of  days, when in 1323 it witnessed the massive invasion and innumerable killings of devout. Koyil Ozhugu, the  authentic records of events unravels the events  that unfolded at the time when thousands of Srivaishnavaites were massacred defending the holy place.   

Next time, you visit Srirangam – have some extra time – first have darshan of Azhwar, Acaryas, Sri Ranga Nachiyar, Sri Ranga Nathar, Chakkarathazhwar, Sri Ramanujar – and before that walk on the sands near the ‘1000 pillared mantap and the astonishing Vellai gopuram’ -  feel the sand and mother earth, touch the pillars there – if it is late evening, sit with eyes closed – if fortunate, you will visualize the history – when few hundreds travelled far long with Sri Nam Perumal, with the zeal of protecting HIM !!  

                          Just before the Emperumanar Udayavar Sannathi (Thaanana thirumeni – Sri Ramanujar Himself) – is the sannathi of  ‘Ulagariyar’.     I have read in my young days ‘Thiruvarangam Ula’ written by Sri Venugopalan (Pushpa Thangathurai)  and have heard this story many times from my mother too ~ and after knowing something on this, one tends to naturally go rushing to this sannathi, worship the acaryar – stand for a few minutes – turn back to see none is observing trying to hide the melancholic memories thinking of this great scholar who sacrificed at such an old age, protecting NamPerumal Himself ~ would one ever need a human to save God – that is one of His wishes and His  way of enacting plays testing us over the times.  

Our Acaryar  hailed as ‘Pillai Lokacharyar’  ~ his father Vadakku Thiruveethipillai of his great affection for acharyar Nampillai, named his first son  thus.  Pillai Ulagariyar was born in Thiruvarangam.  He and his younger brother Azhagiya Manavala perumal nayanar grew up in the holy land of srirangam that lies between Thirukaveri and kollidam.   They learnt our sampradhAyam under the lotus feet of their father.  Before writing further – Srivaishnavam owes scholastic study to him through his magnum opus – Sri Vachana bushanam ~ a very small sample to know :  

வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி   இதிஹாச புராணங்களாலே.  

Vedas are divided into Poorva bhagam and Uttara bhagam. The former, also known as the karma bhagam is the samhita portion and the latter also referred as Vedantam or Jnyana bhagam is the portion of Upanishads. The Vedantam explains in detail, about the form, nature, qualities and the riches [vibhuthis] of Paramatma. To those who wish to learn, there could be a Q on which is to be relied upon – to which Acaryar ordains thus.  i.e., one can place reliance only upon Vedas / dharma sastras of great sages Manu, Parasara and others, and the Holy ithihasa puranas of Sri Ramayana and Sri Mahabaratham.  Sri Vachana Bhooshanam, the divine grantha authored by Sri Pillai lokacharyar has its first four sutras as the introduction which concludes by stating that among the Itihasas and Puranas, the instruments in deciding the true meanings of Vedanta, the Itihasas have more validity.  Our Acharyar Sri Manavala mamunigal was so deeply moved by its rich contents.  

I am none to write about our sampradhayam – but more on what is read, a poignant piece of history of the travails at Thiruvarangam.   History is replete with melancholy ~ nothing can be more heart-rending than the real story of Thiruvaranga Chelvanar and the devotees of Bhooloka Vaikundam running places to save the idol from Islamic invasion of 14th century.  Thiruvarangan Ula ’ of Sri Venugopalan is a classic – when the invaders threaten to take over the beautiful holy island of Srirangam – the residents rise up to fight – they were not born fighters, neither had the physique, yet they possessed that  indomitable will to do everything for Thiruvarangar. The book chronicles the preparations, fight with Sultan’s maurading army sacrificing valuable lives, devadasis doing kainkaryam at Temple killing themselves ~ finally a small group of people deciding that Srirangam is no longer a safe place [not for themselves] but for the Perumal – protecting the moolavar by building wall and running away with the Num Perumal, Uthsava idol.   

சிறுவயதில் படிக்கும்போதே நெகிழ்வித்த காவியம் ஸ்ரீவேணுகோபாலனின்  *திருவரங்கன் உலா * - உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது.  கோயில் ஒழுகே தமக்கு அந்த பாதிப்பையும் கதைக்களத்தையும் தந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தார்.  பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD)  டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவை தாக்குகிறான்.  -பன்னீராயிரவர் இன்னுயிர் ஈந்த, தள்ளாத வயதில் இன்னல்களை சந்தித்த ஆசார்யரின் தியாக  வரலாற்றை தெரிந்து கொண்ட பின்னர் -  ஓவ்வொரு முறை திருவரங்கம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெள்ளை கோபுரம் (ஒரு தேவதாசியின்  தியாக சரிதம்), ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளி தாண்டி, ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி முன்பு அமைந்துள்ள சந்நிதியில் உலகாரியரை தரிசிக்கும் போது பக்தி உணர்வுடன் சற்று கண்ணீரும் தளும்புவது இயல்பே.  

இரா வேளையில் கிளர்ந்த அந்த அனுபவத்தில் முன்னணியில் இருந்தவர் ஒரு முதுமை தழுவிய இளைஞர் - பிள்ளை உலகாசிரியர்.  அணிமணிகள் இல்லாமல் அடர்த்தியான மாலைகள் புனையாமல் அரங்கன் புறப்பாடு கண்டு அருளியது மற்றுமொரு சோகம்.  திருவரங்க மாநகரமே உணர்ச்சிகள் கொப்பளிக்க அமைதியாய் அரங்கனோடு நடந்து சென்றனர். திருக்காவேரியில் கொண்டைக்கோல்கள்  (நதியின் ஆழம் தெரிந்து கொள்ள வேண்டி அமைக்கப்பட்டவை) கூட வருத்தத்திலே மூழ்கி இருந்தன போலும்.  

இப்படியாக கஷ்டப்பட்டு சென்ற அரங்கனது ஊர்வலம் தொண்டைமான் காட்டுப்பகுதியில் கள்வர்களையும் சந்திக்க நேர்ந்தது.  .. .. .. அரங்கன் 60 ஆண்டுகள் இப்படி உலா சென்று திரும்பி வந்தது சோக வரலாறு - இடையிலே ஜ்யோதிழ்குடி எனும் ஊரிலே அரங்கனுக்காகவே வாழ்ந்த 'ஸ்ரீவசன பூஷண செல்வன் - சுவாமி பிள்ளை உலகாரியார் திருநாடு அலங்கரித்தது ஒரு கண்ணீர் காதை.  

இவர் நமக்கு 18 கிரந்தங்களை அருளினார்.  இவை   "அஷ்டாதஸ ரஹஸ்யங்கள்" என்ற புகழுடன் விளங்குகின்றன. மற்ற நூல்களில் இல்லாத பல உயர்ந்த ரஹஸ்ய பொருள்களைத் தெரிவிப்பதை, பெரிய பெருமாளுடைய (திருவரங்கம் மூல மூர்த்தி)  ஆணையால் தோன்றியதாய், பெரிய பெருமாளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதான ""ஸ்ரீ வசன பூஷணம்"  என்ற ஒப்பற்ற நூலுக்கு  இரண்டு பூர்வாசார்யர்களின் விளக்க உரைகள்  தோன்றியுள்ளன. அதிலும்,  நம் ஆசார்யர் மணவாள மாமுனிகள் அருளிய வியாக்யானம் மிகவும் ஆச்சர்யமான - அரும் பதவுரைகளோடு பொலிகின்றது.  

ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிரிந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.  

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். இவனது வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதைதோறும் சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்துப்போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று அழைக்கப்படும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.  

படையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு.  அமைதியாய் வேதவாய் மொழி அந்தணர்களாக  வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம்.  ஆக்கிரமிக்கும் படை -  ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து,  திருவரங்கவாழ் மக்களுக்கு சொல்லொணாத்துயர் தருகிறது. அரங்கன் தங்கள்  குலதனம் என்று எப்போதும் வாழும்   ஸ்ரீரங்கம்வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்யபரர்கள், அச்சமயத்தில் வாழ்ந்திருந்த  வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர் பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்ற பாடுபடுகின்றனர்.   உற்சவரின் அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார்  சில வீரர்களுடன்,  சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.  

திருக்கோபுரத்துநாயனாரும், பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டுவழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்து சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு  தள்ளாடும் பருவம் - நூற்றை தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.  

தன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்ககளுகளுக்கு பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை  சென்றடைந்தார்கள்.  வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம்  ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்றதாக கோயில் ஒழுகு உரைக்கிறது.  இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.  

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் உலகாரியர்  திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தி திருவரசு எழுப்பினார்கள்.  

திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம்  என சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக்  திருப்பதிக்கு செல்கிறார்.  உளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.  50 ஆண்டுகள் திருவரங்கன் ஊரை விட்டு சென்ற துயர காவியமே '#திருவரங்கன் உலா'  

In the year 1311 A.D and again in 1323 A.D, Muslim forces led by Malik Kafur and Ulugh Khan attacked the temple. In the first sack of Srirangam, all the golden gifts made to the temple were carried away but fortunately it did not affect the religious life at Srirangam.  There was to be another pillage whence the garrisoned Thiruvarangam fell in the hand of marauders. In the raid in 1331 AD,  Namperumal had to be moved to safety by a band of devotees headed by Pillai Lokacharyar – and in this period of 60 years, Arangan visited Madurai, Azhwar Thirunagari, Nagercoil, Thiruvananthapuram,  Quilon, Kozhikode, Sathyamangalam – and to Thirumala Tirupathi, first hidden in ravines of the Hill and then in the Temple – returned to glory in 1371 to the delight of all.  

In the year 1205  on Thiruvonam in the month of Aippasi, was born Pillai Lokacharyar, (named after Swami Nampillai) – to  "Vadaku Thiruveedhi Pillai".  He had illustrious brother  Azhagiya Manavaala Perumal Naayanar. The most learned Acharyar Pillai Ulagariyar wrote 18 works that are known as "Ashtadasa Rahasyangal",  divided into three categories. The first category talks about Rahasya Thrayam containing 8 works; Thathva thrayam comprising 5 and another 5 that includes his magnum opus ‘ Srivacana booshanam’.  Swami Pillai lokacharyar delivered  discourses to his sishyas in "Kaatazhagiya Singar" mandapam in Srirangam.   Another greatness of Pillai Logachar is his documenting the granthams in simple tamil [manipravalam] easily understood by all those interested in learning Srivainava granthams.  

In his Upadesa Rathna Maalai, Swami Manavala Maamunigal extols the works of Pillai Ulagariyar and states that only most learned  can understand the majestic Sri Vachana Bushanam, fewer still can practice.  When the gruesome plundering occurred, Ulagariyar at his ripe old age took the vigraham of Thiruvarangan, proceeded towards Madurai. Travelling in harsh path of thorns in the forest, infested by thieves, he reached Madurai after many many hardships.   At the outskirts, he protected Perumal at "Jyothishkudi" (near present day Aanaimalai)  in a cave and continued  thiruvaradhanam & all other rituals.   In protecting Arangan first from moghuls and then from robbers, in his old age, he fell ill and sadly passed away, but still ensured in organising youngsters to continue his avowed path of protection.  It is believed that he carried Thiruvarangan in the dense forest and in trying to reach a ravine, fell, but ensured that there was no harm to the divya vigraha. Injured in the process, he fell ill and finally breathed his last, reaching the abode of Sriman Narayana.  

Our Sampradhayam thrives on the glorious literature handed over to us by our greatly learned Acaryas and the extreme sacrifices of Sri Pillai Logachar and thousands of nameless others.  Next time you visit Srirangam, take some extra minutes to go inside this sannathi [just before that of Sri Ramanujar] thinking of his glory and his sacrifice. 


~with tears thinking of such Acaryas and their way of life
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
31.10.2020.

  

Acaryar thiruvarasu at Madurai jyothishkudi


Ulagariyar at Melukote Thirunarayanapuram



Pillai Logachar at Thiruvallikkeni purappadu 2019

 

Pillai Ulagariyar at Thiruvarangam

worshipping Sriman Narayana .. பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலி ! :: விசும்பு என்றால் ??

Chennai has been experiencing heavy rains, making people happy.   The northeast monsoon arrived in Tamil Nadu as parts of the state received heavy rainfall, accompanied by thunderstorms on Thursday in the wee hours of morning. Most parts of Chennai received heavy rainfall, leading to waterlogging in several areas.  At Thiruvallikkeni copious water flow into the temple tank ‘Kairavini pushkarini’ of Sri Parthasarathi Swami temple is making Thiruvallikkeni vasis happy.  According to the India Meteorological Department (IMD), Chennai and neighbouring districts of Tiruvallur, Kancheepuram and Chengalpattu will receive heavy rainfall over the next few hours. Chennai recorded a total of 872 mm of rainfall, while the the average rainfall recorded was 97.27 mm.  At places, it was close to 20 cm with Mylapore recording the highest ! .. .. it augurs well  ..  “rains are very essential”.

Thiruvalluvar’s simple yet very powerful message on nature, agriculture and what constitutes life ..  அற்புத கருத்தை அளிக்கும் செந்நாப்போதாரின் இன்று படித்த திருக்குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

Do you live in an apartment complex .. .. how often do you go to the terrace, especially at the night times.  Or from your windows, is the night sky visible ? Living in towns and cities, few of us get to see the true beauty of the night sky, unpolluted by artificial light. In 2021 and beyond, celestial escapes will be in high demand, as people seek time in the wilderness as an antidote to the stresses and strains of modern life. It may be hard to believe but there are places in the world where, after dusk, it is possible to read by starlight and to see your shadow in the light of the moon.  

இரவு வேளைகளில் ஆகாயத்தை நோக்கி அமர்ந்து விண்மீன்களையும் நக்ஷத்திரங்களையும் கண்டு களித்தல்  எவ்வளவு ஆனந்தம் தரும் !  ..  ஆகாயம், வானம், விண் - தேவலோகம், - நம் ஆழ்வார்கள்  வார்த்தையில் 'விசும்பு' - அதுவும் எப்படி பட்டது ?  - clear sky  - தெளி விசும்பு.   

The sky is also referred to as ‘celestial dome ‘ as it  lies above the surface of the Earth, including the atmosphere and outer space. In the field of astronomy, the sky is also called the celestial sphere. This is an abstract sphere, concentric to the Earth, on which the Sun, Moon, planets, and stars appear to be drifting. The celestial sphere is conventionally divided into designated areas called constellations.   The daytime sky appears blue because air molecules scatter shorter wavelengths of sunlight more than longer ones (redder light). The night sky appears to be a mostly dark surface or region spangled with stars. The Sun and sometimes the Moon are visible in the daytime sky unless obscured by clouds. At night, the Moon, planets, and stars are similarly visible in the sky.

விசும்பு   என்றால் : வானம், ஆகாயம், விண்- மற்றைய பொருட்கள் : மேகம்; தேவலோகம்; திசை;  சன்னமான அழுகை. இதோ இங்கே நம் கலியன் திருமங்கை மன்னனின் அற்புத திருமொழி பாசுரம் :  

பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமும்  இவையாயினான்,

பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலி பெருகுமிடம்,

காரும் வார்ப்பனி நீள்விசும்பிடைச் சோருமாமுகில்  தோய்தர,

சேரும் வார்ப்பொழில்  சூழ் எழில்  திருவேங்கடம்  அடைநெஞ்சமே.



பஞ்ச பூதங்கள் எனப்படும் :  நீர்;  நெருப்பு;  காற்று;  நிலம்; , ஆகாயம்  எனும் பஞ்சபூத ஸ்வரூபியானவனும், ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதிபாதிக்கப்படும்  பரிசுத்தமான, கருமை பயனான,  பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  - வளருகிற இடமானதும், பெரிய ஆகாசத்தினின்றும் மழைநீரும் மிக்க பனித்துளியும் பெய்யப்பெற்றதும், வானத்திலுள்ள  காள மேகங்கள் வந்து படியும்படியாக  பொருத்தமான  உயர்ந்து ஓங்கி  மணம் கமழும் ரம்மியமான  சோலைகளாலே  சூழப்பெற்றதும்  எழில் பொங்கும் அழகினையுடைய திருவேங்கடத்தை சென்று அடை என்று தம் நெஞ்சிற்கு ஆணையிடுகிறார் கலியன்.   திருமலையோ, திருவரங்கமோ, திருவல்லிக்கேணியோ வேறு எந்த திவ்யதேசமோ .. .. நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் தன பக்தர்களை காப்பாற்ற எப்போதும் காத்திருக்கிறான்.  அவன் திருவடி நீழலில் சேர்வதே நமக்கு எல்லா பிணிகளுக்கு மருந்து.

Life in a divyadesam offers wondrous opportunities of His darshan and here are some photos of Thavana Uthsavam of Sri Parthasarathi Perumal  (morning and evening) purappadu of 13.3.2011. 

adiyen Srinivasa dhasan
Mamandur Srinivasan Sampathkumar
29.10.2020












 

  

வைப்பாம் மருந்தாம் .. .. .. " எங்களாயர் கொழுந்தே " . Sri Parthasarathi Pandiyan kondai

Gold and silver prices in Indian markets continued to struggle as the precious metals slipped in global markets. On MCX, December gold futures were down 0.2% to Rs.50,860 per 10 gram while silver rates fell 0.5% to Rs.61,978 per kg. In the previous session, on MCX, gold futures had ended flat while silver edged up 0.6%. MCX gold prices are in a consolidation range with lack of directive trades and a rise above Rs.51,200 could boost prices higher,  Financial Services said in note. "If MCX silver holds the downside obstacle of Rs.61,000, it could rise higher to Rs.62,900 initially then to Rs.63,400 region. But fall below Rs.61,000 may squeeze down prices lower," the broking Company  added.



In global markets, gold prices were marginally lower today amid ebbing hopes of US stimulus before the elections. A stronger US dollar also weighed on gold. Spot gold fell 0.1% to $1,905.51 per ounce while the dollar index was up 0.22% against rivals, making bullion expensive for those holding other currencies. Comex gold futures moved higher on Tuesday, boosted by a weaker U.S. Dollar and concerns over a second surge in coronavirus cases, although the volume and the trading range were so tight, it was hard to tell if we were witnessing actual buying or just short-covering.

The price of gold has rocketed during the pandemic, but mining it is getting more difficult. Global reports suggests  on challenges and controversy at one of the UK’s biggest planned mines. With 460 million-year-old veins of gold strewn hither and thither in the rock deep underfoot, the prospect of a mine in Curraghinalt, in a remote corner of the Sperrin mountains, has been talked about for decades – but it has never yet materialised. A recent application by a mining company to extract the seams of precious metal, has brought the prospect closer still. If successful, the firm says it could bring new jobs and money to the area. But many here want to keep things the way they are.  ..

~ whatever be the Pandemic or any other panic, the World continues in its avarice in owning the yellow model and these parts, people are so fond of buying gold jewellery !! 

இளைஞர்கள் உலகமே வேறு !  .. .. வயது முதிர்ந்து பணி ஓய்வை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரும் தங்களது எதிர்காலத்துக்கு பெரிதும் நம்புவது 'வருங்கால வைப்பு நிதி'.   இது ஒரே நாளில் வரும் பணமல்ல ! பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனமும்  அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். பணி முதிர்வின் போது கணிசமான தொகை கிட்டும்.  இத்தொகையை சரியாக முதலீடு செய்தால், வாழ்க்கையை கவலையின்றி கழிக்கலாம்.  

இது சாதாரணர்களின் கவலை.   மண்ணுலகம் விண்ணுலகம் முதலான எல்லாவிடங்களிலும் எல்லாவற்றாலும் உயர்த்தி பெற்றிருப்பார் கூட உண்டே !! ; அவர்களெல்லாரையும் ஆனந்த குணத்தாலே வென்று அவர்களுக்கு எவ்வளவோ மேற்பட்டவனென்னவேண்டும்படியான நிலைமையிலே நிற்பவன்; இப்படிப்பட்ட ஒப்புயர்வற்றமேன்மை இருக்கவல்லன் ஸ்ரீமன் நாரணன் ஒருவனே.  அவன் திருவடி தாமரைகளை பற்றியவர்க்கு எந்த கவலையும் இல்லை.

Rhode Island, officially the State of Rhode Island and Providence Plantations,  is a state in the New England region of the United States. It is the smallest U.S. state by area and the seventh least populous, but it is also the second most densely populated.   Providence is the state capital  and one of the oldest cities in the United States.

Providence (noun) means :  an influence that is not human in origin and is thought to control people's lives.  But for those closer to retirement, it is most sought after thing - Provident fund is another name for pension fund. Its purpose is to provide employees with lump sum payments at the time of exit from their place of employment. This differs from pension funds, which have elements of both lump sum as well as monthly pension payments.  

There cannot be any doubt at all in what is the futuristic Provident fund for us, living in this World filled with earthly desires.  The Lord of infinite virtues, Sriman Narayana is the only ONE  who is the  medicine and the wealth of devotees; He will protect us and guide us and prevent everything else in ruining us.

 

இதோ இங்கே ஸ்வாமி  நம்மாழ்வாரின் அமுத மொழி :  

வைப்பாம்  மருந்தாம்  அடியரை, வல்வினைத்

துப்பாம் புலனைந்தும் துஞ்சக்  கொடான்  அவன்,

எப்பால் யவர்க்கும் நலத்தால்  உயர்ந்துயர்ந்து,

அப்பாலவன்   எங்களாயர் கொழுந்தே.

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எத்தகையன் !  தன்னடியாரை வலிய கருமங்களினுடைய மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற  பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு நசித்துப்  போகும்படி விட்டுக் கொடாதவன்.  அவனே,  அவர்களுக்குப் புருஷார்த்தமான நிதியாகவும், பிணியை போக்கும் மருந்தாகவும் இருந்து காக்க வல்லன்.  அந்த எம்பெருமான் ஒருவனே, எவ்விடத்துமுள்ள  யாவர்க்கும்  ஆனந்தகுணத்தினால் மிகவும் உயர்ந்து வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதபடி அப்புறப்பட்டவனாய், அவனடியாரான ஸ்ரீமன் நாராயணனின் பக்த கோடிகளுக்கு எப்போதும் உரியவனான  'ஆயர் கொழுந்து' என போற்றப்படும் தலைவன். அவனடி பற்றி, அவனிடம் சேர்ந்து உய்வு பெறுவோமாக !!

Oct 26,2020 was Vijayadasami celebrated grandly.  It was Peyazhwar sarrumurai also.  At Thiruvallikkeni Sri Parthasarathi Perumal adorned a beautiful Golden Pandiyan crown tendered to Temple by Challani Jewellery Mart is a unit of  Jayantilal Challani  Group of  companies.  Here is a photo of Sri Parthasarathi Perumal adorning the new Pandiyan kondai as also some photos of Thavana Uthsavasm day 4  on 25.2.2018 when Sri Parthasarathi adorned the traditional Pandiyan kondai and had purappadu to Thavana uthsva bungalow and later Periya mada veethi. 

Aadiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.10.2020.