To search this blog

Tuesday, September 12, 2017

Sri Periyazhvar Vaibhavam ~ Kaithala SEvai at Sri Villiputhur Divyadesam

The  day (2nd Sept 2017) was a great day in my life as  it provided the  fortune of partaking in Thirupallandu, Thiruppavai goshti at Sri Periyalwar sannathi ~ hearing and seeing the ‘thala abinaya composition’ of Sri Villiputhur Arayar Swami – in the lineage of our great Acharyar Nadhamunigal – and kaithala sevai of Sri Periyazhwar !!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு **

Sri Periyaazhwaar was born as ‘Vishnu chithar’ at Sri Villiputhur.  With exceptional commitment, he rendered  floral service to the Lord Vada Bhathrasayee.  With the blessings of Lord, he proved before the Pandya King, the uniqueness of Sriman Narayanan.  He was honoured by the King and was taken around atop bridled elephant.  To honour him Lord Sriman Narayana along with Pirattiyar appeared on Garuda vahanam and Vishnu Chithar instead of asking for favours [which any other normal human would have done] started singing paeans in a manner that he sought that HIS wealth and other blessings should remain as they are without diminishing in any manner.  Such was his devotion that he was called ‘Periyaazhwaar’ –the big among all others.  

His renditions are “Thirupallandu” and “Periyazhwaar Thirumozhi”.  Though they were not the ones made first, in Sri Vaishnavism, they are considered to be the initial ones in  ‘Naalayira Divyaprabandham’ compiled by Sriman Naathamunigal and everytime ‘Naalayira Divyaprabandham’ is rendered, it begins with ‘Thirupallandu’ only and here is something I learnt on its greatness.

ஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது  **'திருப்பல்லாண்டு'**

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு

- இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆணி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில்முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும்  புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர்.  .  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர். 


வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில்  இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை  சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார்.   பாண்டியன் சபையில் ' பரம்பொருள் யாது' என்ற போட்டியில் ஸ்ரீமந்நாராயணின்  கடாட்சத்தால் ஸ்ரீமந்நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பரத்துவத்தை  நிர்ணயம் செய்து வெற்றி கண்டார்.   இதனால் அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டுகளிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி  பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில்  உள்ள மணிகளைத்  தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.

ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார்  இந்நிலத்திலே எம்பெருமானுக்கு  யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர்.    எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவுகொண்டவனும்  மல்லர்களை  புறந்தள்ளினவனுமான  புஜபல பராக்கிரமசாலியை கண்டும் மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார்.   சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.
   
பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்".  

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்களம் ஆதலால்*-- ~~~~

                                  'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது -" திருப்பல்லாண்டு" என நம் ஆச்சார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார்.  ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும்திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு.  திருப்பல்லாண்டு மொத்தம் 12  பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.


அற்புத திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் - ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த பூமாலை  வடபத்ரசாயீ எம்பெருமானுக்கு; பின் அம்மாலை  பெரியாழ்வாருக்கும் சாற்றப் பெருகிறதாம். 


அனுதினமும், காலை திருப்பாவை சாற்றுமுறை சந்நிதியில் நடந்தபின், பட்டர் தமது கைத்தலத்தே பெரியாழ்வாரை ஏளப்பண்ணிக்கொண்டு  சந்நிதி வாயில் அருகே வந்து - எம்பெருமானை சேவிக்கப்பண்ணுவது இங்கே நடைபெறும் அற்புத சேவை.  அடியேனுக்கு அன்று கிடைக்கப்பெற்ற அந்த அரிய  சேவை புகைப்படங்கள் இங்கே.





ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம். ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

No comments:

Post a Comment