To search this blog

Sunday, July 19, 2015

Thiruvallikkeni Kodai Uthsavam - Sri Parthasarathi - day 4 - 2015

Now Kodai Uthsavam is on at Thiruvallikkeni and today [19th July 2015] is day 4.

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடைகால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை உத்சவம்".  முன்னாளில் பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறிபின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார்.

இப்போது 'வசந்த உத்சவ பங்களாஇல்லாத காரணத்தால், பெருமாள் வெங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்" என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார். இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும்,உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்"  எழுந்து அருள்வது விசேஷம். 


ஏழு நாள் நடைபெறும் இவ் உத்சவத்தில் இன்று நான்காம் உத்சவம்.  'நான்முகன் திருவந்தாதிசேவிக்கப்பட்டது. புறப்பாடு சமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.                                                                      

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.  








No comments:

Post a Comment