To search this blog

Thursday, July 5, 2012

Thiruvallikkeni Azhagiya Singar Day 8 - Lakshmi Narasimha Thirukolam


திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் –
எட்டாம் நாள் காலை - லக்ஷ்மி நரசிம்ஹர் திருக்கோலம்

On day 8 [5th July 2012] of Sri Azhagiya Singar Brahmothsavam at Thiruvallikkeni, it was Lakshmi Narasimha Thirukoalam in pallakku.

திருமங்கை மன்னன் தனது 'திருமொழியில்' - திருவல்லிக்கேணி     அழகியசிங்கரை இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார். 
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்*  
ஒள்ளியவாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி,*
பிள்ளையைச்சீறி வெகுண்டுதூண் புடைப்பப்mபிறையெயிற்றனல் விழிப்பேழ்வாய்                               தெள்ளியசிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே.

"பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்" - இரணியனை கொல்வதற்காக  நரசிம்ஹர், பிறை போன்ற பற்களையும், நெருப்பு பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையும் உடையவனாக திருவவதாரம் பண்ணினாராம்.  திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்ரத்தில் "நரசிம்ஹர்" - யோக நரசிம்ஹராக எழுந்து அருளியுள்ளார்.  உத்சவர் அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி - தெள்ளிய சிங்கர்.  இவரது வடிவழகின் காரணமாக 'அழகிய சிங்கர்' என்றும் திருநாமம். 

இவ்வளவு வடிவழகிய பெருமாள் இன்று காலை - "லக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன் அற்புத தரிசனம் அளித்தார்.  பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருந்தார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்





No comments:

Post a Comment