To search this blog

Thursday, July 14, 2011

Lord Koodal Azhagar Thirukovil at Madurai and Ashtanga Vimanam

Recently went to Madurai and had the fortune of worshipping Koodal AzhagarMadurai is known as Koodal Nagar and this temple, one amongst the 108 Sri Vaishnava Divyadesam is located very close to the Bus stand / Railway Station.   Lord is known as Koodal Azhagar and consort is Maduravalli thayar.

The vimana here is renowned as Ashtanga vimana 125 ft high with kalasam of 10 ft.  It has 3 stages.  The vimanam which can be seen from many parts of Madurai can be seen in proximity as there are steps leading to this inside the temple and devotees are allowed to go up and see the vimanam as also have darshan of Lord Suryanarayanar and Lord in reclining posture.  Here are some photos.

The façade of the temple


The dwajastham from outside the temple

Vimanam from the inside corridor

The back side of the sanctum sanctorum



Closer looks of the Ashtanga vimanam

The main gopuram from top

The broad corridor from top

The vimanam as seen from the hotel



சமீபத்தில் மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்க பெற்றேன்.   பாண்டி  நாட்டு  தலை நகரமாக விளங்கிய கூடல் மாநகரில் பஸ் ஸ்டாண்டு / இரயில் நிலையம் அருகிலேயே  " கோழியும் கூடலும் கோவில் கொண்ட " என மங்களாசாசனம்  செய்யப்பெற்ற  திவ்யதேசம் அமைந்துள்ளது.  இத் திருத்தலத்தில்தான்  பெரியாழ்வார் திருப்பல்லாண்டு அருளிச் செய்தாராம். 

காலை  06/30 ணியளவில் கோவில் சென்றதால் அதிக மனிதர்கள் இல்லாமல்  மூலவரை நன்கு சேவிக்க முடிந்தது.  மூலவர் பிரம்மாண்டமாய் வீற்று இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உத்சவர் அழகுற அவரருகே எழுந்து அருளி உள்ளார்.  சன்னதி நல்ல வெளிச்சத்துடன் மூலவரை நன்கு சேவிக்க ஏதுவாய் அமைந்துள்ளது.  சன்னதி சற்றே மேடான பகுதியில் அமைந்து உள்ளது.  சுற்றி அழகான பிரகாரம் உள்ளது.  திருச்சுற்றில் திவ்ய தேச எம்பெருமான் படங்கள் அழகுற மிளிர்கின்றன.  அடுத்த பிரகாரத்தில், சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.  அவரை தரிசித்து மேலும் இடப்புறம் சென்றால் தாயார் தனிக்கோவில் நாச்சியார் ஆக எழுந்து அருளி உள்ளார். மதுரவல்லி தாயார் என திருநாமம். வெளிப்பிரகாரத்தின்  மறுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் நந்தவனமும் உள்ளன.

இத் திருத்தலத்தில் அஷ்டாங்க விமானம் வெகு பிரசித்தி.  இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என வழங்கப்படுகிறது.  மதுரையின் பல இடங்களில் இருந்தும் இந்த உயர்ந்த விமானம் சேவை ஆகிறது.

கோவிலுக்குள் படிகள் வாயிலாக மேல் தளத்துக்கு சென்று இந்த விமானத்தை சேவிக்க வழி உள்ளது.  விமானத்தின் முதல் தட்டில் நின்ற திருக்கோலத்தில் சூர்யநாராயணரும், அடுத்த தளத்தில் சயனித்த திருகோலத்தில் பள்ளிகொண்ட பெருமாளும் எழுந்து அருளி உள்ளனர். இவை வர்ணம் பூசப்பெற்ற திருமேனிகள்.

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment