To search this blog

Tuesday, June 22, 2010

Thiruvallikkeni Azhagiya Singar Brahmotsavam 2010 (திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் 2010)

கோவில்கள் நமது அனுதின வாழ்க்கையில் முக்கிய அம்சம். அனுதினமும் பெருமாளை சேவிப்பது ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். பெருமாள் சொவ்லப்யமாக பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறான். பெருமாளை எளிதில் அடைய ஏற்படுதபட்டதுதான் அர்ச்சாவதாரம். "எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது' என்பது ஆசார்யன் வாக்கு.


ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் பெருமாள் புறப்பாடு என்பது விசேஷம். பெருமாளுக்கு பிரம்மோத்சவம் என பத்து நாள்கள் விழா நடக்கும். பிரம்மாவால் ஆரம்பிக்கப்பட்ட உத்சவம் எனவே பிரம்மோத்சவம்.


திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவம்ங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம். சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு நேற்று (21/06/10) முதல் பிரம்மோத்சவம்.


பெருமாள் தர்மாதி பீடத்தில் அழகுற மிளிர்ந்த சிறப்பு புகை படங்கள் சில இங்கே :
கோஷ்டி துவங்கும் சமயம்

கங்கை கொண்டான் மண்டபத்தில்

                               இரட்டை கொடையுடன் வீதியில் எழுந்தருளும் பெருமாள்

 அடியேன் சம்பத்குமார்

No comments:

Post a Comment