To search this blog

Monday, March 16, 2026

new Prapannapakai for Swami Doddachar @ Thirukadigai divyadesam

14.3.2026 was Masi Uthiradam – the birth anniversary of Chandamarutham Swami Doddayacharyar.

ஸ்வாமி முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு  மாசி உத்திராட நக்ஷத்திரத்தில்  தேவராஜகுரு என்கிற  ஸ்வாமி தொட்டையாச்சார்யார்  திருவவதாரம் செய்தார். நமது சம்பிரதாயத்தின் தூண் ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் ஸ்வாமி    (ஸ்ரீ மஹாசார்யர்)  1543ம் ஆண்டு அவதரித்தார். இவர் திருவேங்கடவரின் அம்சமாக அவதரித்ததால், “ஸ்ரீநிவாஸ மஹாகுரு””மஹார்யர்” என்று போற்றப்படுகிறார். 

தொட்டாச்சார்யார் ஸ்வாமி பஞ்ச விஜய கிரந்தங்கள் பண்ணி அருளினார். சோளஸிம்ஹபுரம் எனும் திருக்கடிகை; தில்லை திருச்சித்திரகூடம் போன்ற பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்து, நிர்மாண புணருத்தாரணங்கள் செய்வித்தார். 

நம்   ஸ்வாமியின் தனியன் :

வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயம் வினயாதிகம்

ப்ரஜ்ஞாநிதிம் ப்ரபத்யேஹம் ஸ்ரீனிவாஸ மஹாகுரும் !!

திருக்கடிகை எனும் சோளஸிம்ஹபுரம் [சோளிங்கர்] திவ்யதேசத்தில் நம் ஆச்சார்யருக்கு சந்நிதியும் அர்ச்சை திருமேனியும் அழகுற அமைந்துள்ளன.  

 



இவ்வருஷ திருநட்சத்திரத்தன்று, ஸ்ரீ உ. வே. கோயில் கந்தாடை சண்ட மாருதம்  தொட்டயாச்சார்ய  ஸ்வாமி திருமாளிகை , [ஸ்ரீ உ. வே. கோ க ச  பெரியப்பங்கார் ஸ்வாமி திருமாளிகை] சோளஸிம்ஹபுரம் – சார்பாக ஸ்ரீ உ. வே. கோயில் கந்தாடை சண்ட மாருதம்  ஸ்ரீ உ. வே. கோ.க.ச  யோகந்ருஸிம்ஹ ஸ்வாமி (வர்த்தமான ஸ்வாமி) மஹார்யருக்கு புதிய பிரபன்னபாகை, சமர்ப்பித்தார்.  புதிய திருவாபரணத்துடன் நமது ஆச்சார்யரின் புகைப்படம் இங்கே.  




நம் ஸ்வாமியின் வாழி திருநாமம் இங்கே :

 

மாசி உத்திராடத்தில் வந்துதித்தான் வாழியே

மாசில் புகழ் பெரியப்பன் மகிழ்ந்த மைந்தன் வாழியே

தேசெங்கும் பரவாதிசயம் படைத்தான் வாழியே

தரிசனத்தை உத்தரித்து தெளிவித்தான் வாழியே

ஆசில் எதிராசர் நிகரான குரு வாழியே

ஐந்து விஷயங்களும் அருளினான் வாழியே

தூசில்  வாதுல குலம் துலங்க வந்தோன் வாழியே

தூய  மகாதேசிகனார் துணைப்பதங்கள் வாழியே  !

 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்,

ஸ்ரீனிவாசன் சம்பத்குமார் 

4 comments:

  1. Acharyar thiruvadigale saranam - Malavika

    ReplyDelete
  2. lovely kireedam .. Guna

    ReplyDelete
  3. ஆச்சார்யா திருவடிகளே சரணம்...

    ReplyDelete