Thursday, January 9, 2025

Thirumylai Madhavar Nachiyar thirukolam 2025

என் நலனும்  என் நிறைவும் என் சிந்தையும்

என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு,

 


(என்னுடைய அழகையும், என் அடக்கத்தையும், என் நெஞ்சையும், என் கைவளைகளையும் எம்பெருமான் அபஹரித்துக் கொண்டதுமன்றி -என்னை அடிமையாகவும் கொண்டான்) - அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க, என்னுடையவற்றை அவர் கொள்ளைகொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! 

திருமங்கைமன்னன் திருநெடுந்தாண்டகம் - மின்னிலங்கு திருவுருவும்  பாசுரம்

 


திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் நாச்சியார் திருக்கோல அழகும், அவர்தம் வளையலும், திருக்கரங்களில் அழகு கிளியும் - பகல்பத்து சாற்றுமுறை சாற்றுப்படி அழகு !

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
9.1.2025

No comments:

Post a Comment